உலகில் உள்ள ஒவ்வொரு பொருள்களும் தாது மூலம் ஜீவன்களால் ஆனது. தாது என்பது கல், மண் போன்ற கனிம பொருள்களும், பஞ்ச பூதங்களாகிய நிலம்,நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை குறிக்கும்.(இதில் அனுவும் அடங்கும்)மூலம் என்பது மரம்,செடி, கொடி வகைகளை குறிக்கும். ஜீவன் என்பது உயிர் இனங்களை குறிக்கும். இம்மூன்றை தவிர உலகில் வேறொன்றும் இருக்காது. தேசியக்கொடியின் முவ்வண்ணங்களில் முதலில் இருப்பது காவிநிறம் நம் இந்திய தேசியக்கொடியில் மூன்று வண்ணங்களில் முதலில் இருப்பது காவி நிறமாகும். இந்த காவிநிறமானது ஜோதிட சாஸ்த்திரத்தில் கேதுவை குறிக்கும். எண்கணிதம் முறைப்படி எடுத்துக்கொண்டால் கேதுவிற்குறிய எண் 7 ( ஏழு ) ஆகும். இரண்டாவதாக உள்ளநிறம் வெண்மை இது சந்திரனை குறிக்கும். இதற்குறிய எண் 2 ( இரண்டு ) ஆகும். மூன்றாவது நிறம் பச்சை இதற்குறிய கிரகம் புதனை குறிக்கும். இதற்குறிய எண் 5 ( ஐந்து ) ஆகும். அசோக சக்கரம் நீலநிறத்தில் உள்ளது இதற்குறிய கிரகம் சனியாகும். இதற்குறிய எண் 8 ( எட்டு ) ஆகும். ஆக 7 + 2 + 5 + 8 = 22 = 4 ஆகும் நான்கு என்பது ராகுவை குறிக்கும் ராகு என்றாலே மனித தலையுள்ள நாகத்தை குறிக்கும் அதாவது புராணக்கதைகளில் ராகுவும் கேதுவும் சூரிய சந்திரரை விழுங்க பிரதட்சிணமாக வருகிறார் எனவே ராகு எண்ணாகிய நான்கு அமைந்திருப்பதால் அனைத்துநாடுகளையும் அடக்கி ஆளும் வல்லமை ( வல்லரசு நாடு )நம் இந்திய நாட்டிற்கு உண்டு என்று சுட்டிகாட்டும் விதத்தில் நம் தேசியக்கொடி அமைந்துள்ளது. கேது என்றாலே நம் இந்து சாஸ்த்திரத்தில் வால் உள்ள கிரகம். அதாவது வால் உள்ள கிரகம் வாலுள்ள தெய்வங்கள் விநாயகர் ( துதிக்கை வால் போன்றது ) எனவே நாம் நம் தேசியக்கொடியில் முதலில் விநாயகரைத்தான் வைத்திருக்கிறோம். ஆகவே நாமும் ஒவ்வொரு காரியங்களும் செய்யும்போது முதலில் விநாயகரைத்தான் வழிபடுகிறொம். நாம் முதலில் விநாயகரை வழிபடுவது நாம் நம் தேசியக்கொடிக்கு செழுத்தும் மரியாதையாகும். நம்தேசியக்கொடியில் முதலில் மேலேயிருப்பது தாதுவை குறிக்கும். உலகம் முதலில் தோன்றியது தாதுவாகத்தான் இருந்தது. அதன்பிறகு மரம், செடி, கொடிகளை குறிக்கும் மூலப்பொருள் உண்டானது எனவே தேசியக்கொடியில் இரண்டாவதாக வெண்மை நிறத்தை அமைத்திருக்கிறோம். வெண்மை நிறம் என்பது ஜோதிட சாஸ்த்திரத்தில் சந்திரனை குறிக்கும். சந்திரன் ஜோதிடத்தில் மூலப்பொருளை குறிக்கும். அதன் பிறகு நம் உலகில் ஜீவன்களாகிய உயிரினங்கள் தோன்றின எனவே மூன்றாவதாக ஜீவனை குறிக்கும் கிரகமாகிய புதனின் நிறமாகிய பச்சை நிறத்தை கடைசியில் அமைத்திருக்கிறோம். அதுமட்டும் இல்லாமல் வெண்மை நிறத்தின் மையத்தில் காலச்சக்கிரத்தை குறிக்கும் அசோகாசின்னம் நீலநிறத்தில் அமைத்திருக்கிறோம் நீலம் என்பது ஜோதிடசாஸ்த்திரத்தில் சனீஸ்வரரை குறிக்கும் சனீஸ்வரர் என்றால் கர்மாவை குறிக்கும். சனி என்றால் முதியவர் கோலூன்றி நடப்பவர் என்று பொருள் எனவே நம் தேச தந்தையை தேசியக்கொடியின் மையத்தில் அமைத்திருக்கிறோம். வெண்மை நிறத்தில் உள்ள நீலநிற சக்கரம் மஹாத்மாவாகிய நமது தேசதந்தை காந்தியடிகளை குறிக்கும் காரணம் சந்திரன் வெண்மை இதற்குறிய எண் 2 நீலநிறசக்கரம் நீலம் என்பது சனி இதற்குறிய எண் 8 இரண்டும் சேர்ந்தால் 10 இதற்கு சூரியன் அதிபதியாகும் சூரியன் என்றால் உயர்ந்தவன் எனவே மஹாத்மா என்று பொருள் அவர் கர்மாவை வென்றவர். எனவே அந்தவடிவில் காலச்சக்கரமாக நம்மை வழிநடத்தி செல்கிறார். வெண்மை நிறத்தில் அமைக்க காரணம் வெண்மை சந்திரனை குறிக்கும் நீலநிறம் சனியை குறிக்கும் ஜோதிடசாஸ்த்திரத்தில் சனியும்,சந்திரனும் சேர்ந்தால் மிதவாதமாகிய அஹிம்சையை குறிக்கும் எனவே அஹிம்சை வழியில் நம்மை வழிநடத்துகிறார். மூன்றாவதாக அமைந்துள்ள பச்சை நிறம் புதன் இவர் ஜீவகிரகம் எனவே மூலம் தோன்றிய பிறகுதான் உலகில் ஜீவன்கள் தோன்றியது என்ற ஆன்மீக உண்மையை நம் தேசியக்கொடி உலகமக்களுக்கு சுட்டிகாட்டும் வகையில் அமைந்திள்ளது அதுமட்டுமில்லாமல் காவிநிறம் மேலே அமைத்திருப்பது ஆன்மீகத்தில் சென்று முக்தியடைய வேண்டுமானால் அதற்கு கீழேயுள்ள ஜீவனைவிட்டு மூலமாகி அதையும் விட்டு தாதுவிற்கு வரவேண்டும் என்று பொருள் தாது (அனுவை குறிக்கும்)என்பது கடவுள்நிலை நாம் அனைத்து கடவுள்களையும் தாதுவடிவில்தான் வைத்திருக்கிறோம் மூலமாகவோ ஜீவனாகவோ இல்லை ஏனெனில் தாதுவைக்கொண்டுதான் மூலத்தையும் ஜீவனையும் உருவாக்கமுடியும் மூலத்தையும் ஜீவனையும் அழிக்கமுடியும் அழித்தால் அது தாதுவாகத்தான் மாறும் அதாவது இறைநிலையடையும் ஆனால் தாதுவை (கடவுள்) அழிக்க முடியாது அழித்தாலும் அது தாதுவாகவேத்தான் இருக்கும் இறைநிலை அடைய மூலம் ஜீவனைவிட்டு (சந்திரன் வெண்மை எண் 2,புதன் பச்சை எண் 5 சனி நீலநிறம் எண் 8 ) 2 + 5 + 8 = 15 = 6 இதற்குறிய கிரகம் சுக்கிரன் இவர் சிற்றின்பத்திற்கு அதிபதி எனவே இவற்றை அடக்கினால் பேரின்பத்தை அடையமுடியும் என்று சுட்டிகாட்ட நாம் நம் தேசியக்கொடியில் ஆன்மீக உணர்வோடும் ஜோதிடசாஸ்த்திரமும் நிறைந்த நாடு என சுட்டிகாட்டவும் ஆன்மீகமும் ஜோதிடமும் கற்றுக்கொள்ள வாருங்கள் என அழைக்கும் வகையில் அமைத்திருக்கிறோம்.
சனி, 24 ஏப்ரல், 2010
புதன், 5 ஆகஸ்ட், 2009
சாஸ்திரம் ஒரு கண்ணோட்டம்
ஜோதிஷம் என்பது அறிவியல் சார்ந்தது பண்டை காலங்களில் இருந்தே நம் முன்னோர்கள் இதில் பல ஆராய்ச்சிகள் செய்து வெற்றியை கண்டு அதை பல முறைகளில் கையாண்டும் பல கோணங்களில் ஆராய்ச்சி செய்தும் பல நூல்களாக தந்திருக்கிறார்கள் அவைகள் வேதிக்முறை, நாடிமுறை ( நாடி என்பது ஓலைச்சுவடி அல்ல ) மற்றும் இந்நூற்றாண்டு ஜோதிடமேதை கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு புதிய ஜோதிட ( ஜோதிடத்தில் இருக்கும் ) யுக்தியை கையாண்டு கே.பி என்ற முறையை உருவாக்கி இவ்வுலகத்திற்கு தந்திருக்கிறார் என்றால் அது ஜோதிடத்திற்கு கிடைத்த பெருமையாகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)